expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal): காதல் கவிதை
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்
Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Monday, 27 August 2012

உன் நினைவுகள்


உணர்வுகள் இறந்தாலும்
தூக்கம் இரவுகளை மறந்தாலும்
இறக்காமல் வாழுது என்
கண்களில் கண்ணீரோடு
உன் நினைவுகள்

GirL



இனி பேச மாட்டேன் என்று கூறி
பேசிவருகிறேன்
இனி பார்க்க மாட்டேன் என சொல்லி
பார்த்து வருகிறேன்
பொய்யாய் கோவம் கொண்டு
தள்ளி செல்கிறேன்..
ஒரு நாள் ஏனும்
உன்னுடன் பேசாதிருக்க நினைத்து
தோற்று போகிறேன்...
என்னை அமைதியாய் பார்த்து
ஏளனமாய் நீ சிரிக்கிறாயே
உன்னால் முடியாதடி என்றா??


ஒரு தலைக் காதல்



என்னுடையது ஒரு தலைக் காதலா? ” 
நீ இல்லை “ என்று நீ சொல்லும் வரை 
என் கண்ணில் அதே காதலுடன் நான் காத்திருப்பேன் 
ஒரு தலைக் காதலுடன்

Sunday, 26 August 2012

இதயம்


உன் காலில் கொலுசு இல்லையென்றாலும்
நீ நடக்கையில் சத்தம் வரும்
என் இதயம் அங்கேயும்
உனக்காக துடிப்பதால் !...



முத்தம்


நாம் கடற்கரையில்
பேசிச்சென்ற பிறகு
மிச்சமிருக்கிறது....,

ஆயிரம் காதல் வார்த்தைகள்,
கட்டியணைக்கையில் நடுவே
நின்ற தேக்கரண்டி காற்று ,
சில கூந்தல் மயிர்கள்,
மற்றும்
எங்கே செல்வது என்று தெரியாமல்
ஒரு முத்தமும் !!
அதில் இருக்கும் காதலும் !! 


கண்ணீர்


உன் புன்னகையை விட 
உன் கோபத்தை அதிகம் நேசிக்கிறேன் .
என்னை கொலை செய்ய
உன் ஒரு துளி கண்ணீர் போதும் ...!

கடவுள்


தூணிலும்
துரும்பிலும்
கடவுள் என்றால்

என் ஒவ்வொரு
துணிவிலும் நீ..



நீ .


இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ .

தொலைந்த நாய்குட்டி


தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு ,

உன்னால் தொலைந்த
என்னை தேடிப்பார்க்கும்
எண்ணம்கூடவா இல்லை .

மௌனக்கதறல்கள்


அழகே !
உன் செவியில் கேட்கிறதா?
உன்விரல் பட துடிக்கும் பூக்களின்
மௌனக்கதறல்கள் ....♥ ♥ ♥



நேரம்


நீ இருக்கும் போது,
நேரம் போதவில்லை.
நீ இல்லாத போது,
நேரம் போகவில்லை.....!!



காதல்


காதல்
சொல்லப்படுவதும் இல்லை!
கேட்கப்படுவதும் இல்லை!
அது உணரப்படுவது!
உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது ! ....

உடல்


••► உடலால் மட்டும் 
பிரிந்து இருக்கும் உன்னை 
என்னால் மறக்க முடியவில்லை 
நினைத்து கொண்டே இருப்பதால் ◄••

Saturday, 25 August 2012

எவரும் இல்லை !!!!







உன்னை எண்ணி கவிதை எழுத என்னைப்போல் ஆயிரம் பேர் இருக்கலாம்...
ஆனால் என்னைப்போல் உன்னை காதலிக்க எவரும் இல்லை !!!!!


நீ வேண்டும்





•• எனக்கு மட்டுமே நீ வேண்டும்
நீ இல்லையென்றால்
இறுதியென்பது எனக்கு
இப்போதே வேண்டும் ••


உன்னை மறக்கத்தெரியாது



•• எனக்கு பிடிக்காத
ஒன்றை நினைக்கத்தெரியாது,
பிடித்த உன்னை மறக்கத்தெரியாது ••




வாடும் பூ



பின்பு என்னை நினைத்து இவள் வாட வேண்டும் என்றுதான் அன்று வாடும் பூவை எனக்கு பரிசளிதாயோ ••



மரணம்



காதல்
ஒரு அறிமுகம்
உன்னை
பார்க்கும் போது

காதல்
ஒரு பழக்கம்
உன்னோடு
பேசும் போது

காதல்
ஒரு நட்பு
உன்னோடு
பழகும் போது

காதல்
ஒரு உறவு
உன்னை
காதலிக்கும் போது

காதல்
ஒரு வாழ்க்கை
உன்னை
மணக்கும் போது

(
திருமணத்திற்கு பின்)

காதல்
ஒரு உணர்வு
உன்னை
நெருங்கும் போது

காதல்
ஒரு மயக்கம்
உன்னோடு
இருக்கும் போது

காதல்
ஒரு தயக்கம்
உன்னை
பிரியும் போது

காதல்
ஒரு வழக்கம்
உன்னோடு
வாழும் போது

காதல்
ஒரு நினைவு
நீ
இல்லாத பகலில்

காதல்
ஒரு கனவு
நீ
இல்லாத இரவில்

காதல்
ஒரு தேவை
என்
கடமைகளை செய்ய

காதல்
ஒரு சேவை
என்
காயங்களை ஆற்ற

காதல்
ஒரு கடமை
நம்
குழந்தைகளை வளர்க்க

காதல்
ஒரு உரிமை
நம்
காலங்களை கடக்க

காதல்
ஒரு இளமை
நம்
முதுமையை கழிக்க

காதல்
ஒரு தனிமை
நம்
படுக்கை இரண்டாக

காதல்
ஒரு வெறுமை
உன்
மரணம்  முடிவாக!




காதல்மழை



உனக்கு பிடித்தமான
மண்வாசத்தில் நீயும்
எனக்கு பிடித்தமான
உன்வாசத்தில் நானும்....

ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
காதல்மழையில் நனைந்தபடி ....!


அன்பே


அழகை எதிர்பாக்கும் இதயங்களிடம்
அன்பை காட்டாதே...

உன்னிடம் அன்பு வைக்கும் இதயத்திடம்
அழகை எதிர்பார்க்காதே...





வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்