நீரின் மேல் இலைவிழுந்தது போல்
இன்னும் அடங்கவில்லை - என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்...!!
உன் பிரிவினில் என் கண்களில் கரையும்
உப்புகரைசலை உன் மனதில் உள்வாங்கி கொண்டு - பிரிதலில்
உனக்கொன்றும் சலனமில்லை என்பது போல்
பிரிந்து விடுவாய் ...!!
உன்னால் காயப்பட்டு உடைந்து போனது
என் இதயம் -பின் சிதறிய
எண்ணிக்கையில்லா அவைகள் மீண்டும்
முந்தைய அளவைவிட உன்னை விரும்பசெய்து
வலியினிலும் இன்பமடைந்து - மீண்டும்
உடைவதற்கு தயாராகின்றன ...!!
எனக்கு தனிமை பிடித்திருக்கிறது - அது
உன்னுடன் மட்டும் எனும்போது !! - நீ
தாமதமாகவே வருவாய் என்றாலும் - நீ
வரும்வரை துணையாக இருந்த உன் நினைவுகளை களையும்போதுதான் உன்மீது
கோபமே வருகிறது ...!!
ஆனால் சமிபகாலமாக
உன்னை எதிர்பார்த்த என் கண்களுக்கு
ஏமாற்றத்தையே தருகிறாய் ...!!
என் கால்களிடம் கேட்டுபார் - உனக்காக
காத்திருந்த தருணங்களில் என் கால்களின் வலியை எப்படி கரைத்தேன் என்று அழகிய
கவியாக சொல்லும் !!
- நான் எழுதி அனுப்பிய
கவிதைகள் யாவும் திருட பட்டவையே !!
- அது
உன்னிடமிருந்து மட்டும் ...
இன்னும் அடங்கவில்லை - என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்...!!
உன் பிரிவினில் என் கண்களில் கரையும்
உப்புகரைசலை உன் மனதில் உள்வாங்கி கொண்டு - பிரிதலில்
உனக்கொன்றும் சலனமில்லை என்பது போல்
பிரிந்து விடுவாய் ...!!
உன்னால் காயப்பட்டு உடைந்து போனது
என் இதயம் -பின் சிதறிய
எண்ணிக்கையில்லா அவைகள் மீண்டும்
முந்தைய அளவைவிட உன்னை விரும்பசெய்து
வலியினிலும் இன்பமடைந்து - மீண்டும்
உடைவதற்கு தயாராகின்றன ...!!
எனக்கு தனிமை பிடித்திருக்கிறது - அது
உன்னுடன் மட்டும் எனும்போது !! - நீ
தாமதமாகவே வருவாய் என்றாலும் - நீ
வரும்வரை துணையாக இருந்த உன் நினைவுகளை களையும்போதுதான் உன்மீது
கோபமே வருகிறது ...!!
ஆனால் சமிபகாலமாக
உன்னை எதிர்பார்த்த என் கண்களுக்கு
ஏமாற்றத்தையே தருகிறாய் ...!!
என் கால்களிடம் கேட்டுபார் - உனக்காக
காத்திருந்த தருணங்களில் என் கால்களின் வலியை எப்படி கரைத்தேன் என்று அழகிய
கவியாக சொல்லும் !!
- நான் எழுதி அனுப்பிய
கவிதைகள் யாவும் திருட பட்டவையே !!
- அது
உன்னிடமிருந்து மட்டும் ...



10:28
ASWIN GEORGE
.jpg)
Posted in: 

0 comments:
Post a Comment