expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal): அம்மா.
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்
Showing posts with label அம்மா.. Show all posts
Showing posts with label அம்மா.. Show all posts

Sunday, 26 August 2012

கருவறை



கருவறை சுமந்து
உன் துயர் தீர்த்து
புவிதனில் தவழ விட்டு
பரலோகம் நீ போனாய்...
தலைபிள்ளையா நானும்
தரணியில் உதத்தால்
உன் பொறுமையின் வடிவில்
குடும்பம் எனும்
சுமை சுமக்கிறேன்
தாயாய் நானும்


Saturday, 25 August 2012

அழியச் செல்வம்


தெய்வம் வரமாகத்தந்த தெய்வம் நீ அம்மா
நிலை இல்லா உலகில் அழியச் செல்வம் நீ அம்மா....

தாயின் கருவறை''



உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
''
தாயின் கருவறை''



தாயின் கருவறை''



உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
''
தாயின் கருவறை''



அம்மா....



அம்மா.....

உன் காதலியின் உருவத்தை பார்த்து உயிரை கொடுக்க தயாராகும் முன்,
உனக்கு உயிர் தந்த உன் தாயின் உருவத்தை ஒரு முறையாவது நினைத்துப்பார்...
அந்த நொடி தெரியும், காதலியின் அழகில் மயங்கி கிடக்கும் உனக்கு மடி கொடுப்பது உன் தாய் என்று.


அம்மா!!...



அம்மா...
எல்லாப்பூக்கள் மேலயும்...
தூங்கிப்பார்க்கிறேன்...
உன் மடி போல எதுவும் சுகமில்லை...
அம்மா!!...


Tuesday, 14 August 2012

அம்மா


தெருவில் கண்டவளுக்காக...........
கருவில் சுமந்தவளை மறந்துவிடாதே......


Friday, 15 June 2012

தாய்மையின் வலி



தாய்மையின் வலி
என்னவென்று எனக்கும்
தெரியும்....
அதனால் தான்...
அன்று அம்மாவுடன் சேர்ந்து
நானும் அழுதேன்...
நான் பிறக்கையில்....

Sunday, 3 June 2012

அம்மாவின் அன்பு


உன் அம்மாவின் அன்பு எப்போதும் இருக்கும் -நீ நெனச்சாலே போதும் உடம்பெல்லாம் சிலிர்க்கும் உனக்குள்ளே தாயிருக்கா உதிரத்தில் கலந்திருக்கா உள்ளத்து உணர்வெல்லாம் உன் நினைவோடு தானிருக்க தாயோட நேசம் -உன் உயிர் காற்றின் சுவாசம் அன்பென்று சொன்னாலே -அது தாயிடம் தான் வீசும் தாயை நேசிப்போம்

Friday, 1 June 2012

அம்மா


கல்லூரியில் தேர்வாகிய செய்தி வந்ததும்
கண்களில் ஆனந்தக்கண்ணீர் தந்தைக்கு..
கைபிடித்து வாழ்த்து மட்டும் ஏன் அம்மா
கலக்கத்தோடு மகனின் கேள்வி எனக்கு....

பெருமை இல்லையா அப்பாவைப்போல்.?
பொறுமை இழந்து பாவமாய் என் பதிலுக்கு..
பெற்றவளுக்கில்லாத மகிழ்ச்சியாடா மகனே,
போகவேண்டிய பயணம் அதிகமிருக்கு ..

இதுவரை கிடைத்ததெல்லாம் உன் அதிர்ஷ்டமே
இனி உன் பயணத்தில் புரியும் மீதி கஷ்டமே..
இரு கைபிடித்து காட்டியபாதை போதும்..
இருள் நீங்க விழிக்கணும் சுய புத்தி கொண்டு நீயும்..

பெருமைப்படுவேனடா ஓர்நாள் உன்னால்
எதையும் எதிர்பாராது நீ இவ்வுலகுக்கு மன
மகிழ்வோடு செய்திடும் நிலை வருகையில்..
மகன் புரிந்தான் வாழ்வின் உண்மை மகிழ்வை என மனம் மகிழ்வேன் அன்றே நானும் உன்னுடன்....

அதுவரை உன் வெற்றிகள் , முயற்சிகள் என்னை
அமைதியாய் மனம் திருப்தி கொள்ளமட்டுமே செய்யும்.
கீழே விழவோ , தோல்விக்கோ பயப்படாதே , அதில்
கீர்த்திக்கான வழியிருக்கும் துணிவாய் கற்றுக்கொள்..

நிச்சயம் செய்வேன் அம்மா உம் விருப்பப்படி என்றாய்
போதுமடா நான் மரணிப்பேன் இனி இவ்வார்த்தையில்..
சாதாரண வாழ்வு என்போல் வேண்டாமடா உனக்கு
சாதனை வாழ்க்கை வாழ நான் இருக்கேன் துணைக்கு.

பிரசவ வேதனை முடிந்தது நேற்று..
பிறந்தாய் மீண்டும் ஒருமுறை இன்று..

அம்மா!


அம்மா! என்னை வளர்க்க உங்கள் வாழ்க்கையில் நீ சிந்திய இரத்தம்..... என் கை பிடித்து நீ கொடுக்கும் முத்தம்.... என் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்து,அழைத்ததும் என் செல்ல பெயர் சொல்லி அழைக்கும் சத்தம்........ அம்மா! என்னும் பல ஜென்மங்கள் உன் வயிற்றில் பிறக்க ஏங்குகிறேன் நித்தம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்