expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> மாற்றுத் திறனாளி ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 22 May 2012

மாற்றுத் திறனாளி



மாற்றுத் திறனாளி பெண்களின் தாயகம் தியாகம்; தாய் அமுதசாந்தி

அமுதசசாந்தி, பிறக்கும்போதே இடது கை இல்லாமல் பிறந்தவர்;ஆனால் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தோடு வளர்ந்தவர். ஆஸ்ரம வாழ்க்கை இவரது உள்ளத்தில் தொண்டை விதைத்து விருட்சமாக வளர்த்தது.இதன் காரணமாக முதுகலை படிப்பை முடித்ததும் கிடைத்த வேøøயை விட்டுவிட்டு ,கிராமப்புற மாற்றுத் திறனாளி பெண்களுக்கு சேவை செய்வதற்காகவே மதுரையில் கடந்த 2005-ம் ஆண்டு தியாகம் பெண்கள் அறக்கட்டளையை துவக்கினார்.

வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழல், உடல் தகுதியின்மை, பொருளாதார வசதியின்மை, கல்வியறிவின்மை, சமூக சூழல் ஆகியவற்றைக் காரணம் காட்டி தங்களைத் தாங்களே முடக்கி கொள்ளும் மாற்றுத் திறனாளி பெண்கள், உழைப்பதற்கு துணிந்து கூலியை பெறத் தொடங்கும்போதுதான் அவர்களுக்கான மரியாதை இங்கு சாத்தியம் என்பதை உணர்ந்தார். வீட்டைவிட்டு வெளியே வராத வரை மாற்றுத்திறனுடையோர் வாழ்வில், எந்தவொரு மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதை அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உணர்த்தினார்.

இதன் காரணமாக கிராமங்களில் முடங்கிக்கிடந்த மாற்றுத்திறனாளி பெண்களுக்குள் உற்சாகத்தையும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியவர். அவர்கள் மதுரை நகர் பகுதியில் வந்து இலவசமாக தங்குவதற்கு ஒரு இல்லத்தை ஏற்பாடு செய்தார். 

பின்னர் அவர்களின் விருப்பம், கல்வி, திறமை அடிப்படையில் தையல் முதல் கம்ப்யூட்டர் போன்றவை வரை கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.தொடர்ந்து மாலைநேரக் கல்வி மையம், சுய உதவிக்குழு, நட்பு வட்டம், கலைக்குழு, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மையம் ஆகிய எட்டு பிரிவுகள் துவங்கப்பட்டு இன்றைய தேதிக்கு மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள 42 கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மாற்றுத் திறனாளி சகோதரிகள் பலன் பெற்று வருகின்றனர்.

தாங்கள் கற்றுக்கொண்ட பயிற்சிகளால் அதனை தொழிலாக மட்டுமில்லாமல் வாழ்வாகவே மாற்றிக்கொண்டனர். இதனால் பாரமாக இருப்பார்கள் என்று நினைத்த அந்த பெண் பிள்ளைகள்தான், தற்போது மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெற்றோர்களுக்கு ஆயிரமாயிரமாய் சம்பாதித்து கொடுத்து, குடும்பத்தை தாங்கி பிடித்து வருகின்றனர். பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.

தியாகம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் "நைட்டி' போன்ற உடைகள் தரத்தாலும், நியாயமான விலையாலும் மிகவும் பிரசித்தம் பெற்றுள்ளது. அந்த ஆடைகளை கிராமங்களை விட்டு வரவே முடியாத சூழலில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்களிடம் கொடுத்து விற்பனை செய்து லாபம் தருகிறார்கள். இதன் காரணமாக லாபம் மட்டுமின்றி சிறுதொழில் முனைவர்களாகவே பலர் அடையாளத்தையும், பெருமையையும் பெற்றுள்ளனர்.

கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்களே உங்கள் பலம் உங்களுக்கு தெரியாது. உங்களால் முடியாதது எதுவுமில்லை, உங்களது ஒரே ஓரு முயற்சி என்பது தியாகம் பெண்கள் அறக்கட்டளையுடன் தொடர்பு என்பதாக மட்டும் இருக்கட்டும் அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் கவலைக்கும்,வேதனைக்கும் வேலையில்லை என்று சொல்லும் அமுதசாந்தியின் முழக்கமே துளிர்த்த தீரும் நம்பிக்கையின் விதை என்பதுதான்.

தொடர்புக்கு 93452 13417,0452-2602195.

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்